கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தை திறந்து வைக்கின்றார்

பிரதான அலுவலகம், கறுவா அபிவிருத்தி திணைக்களம்,2024-07-10. இன்று, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்சிரமசிங்க அவர்கள் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொள்வதுடன் அது நாட்டின் பொருளாதார பின்னணிக்கு கறுவா கைத்தொழிலின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுருத்துகின்றது. கறுவா துறையில் உள்நாட்டு வாழ்வாதாரம் மற்றும் சர்வதேச சந்தை ஆகிய இரு துறைகளிலும்  பங்களிப்பை மேலோங்கவைக்கும் நோக்கத்துடன் கறுவா துறையின் அபிவிருத்தியை மேம்படுத்த அரசாங்கம் காட்டுகின்ற அர்ப்பணிப்பைப் பற்றி ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் தங்களது விஜயத்தின் போது வலியுறுத்துவார்.

ஆரம்ப நிகழ்வின் ஒரு பகுதியாக கறுவா அபிவிருத்தி திணைக்களம், தமது உத்தியோகபூர்வ  இணையதளத்தை துவங்குகின்றது. அத்தோடு அதன் மூலம் கைத்தொழில் பங்களிப்புகளை மேம்படுத்துவதற்கும் உலகெங்கும் இருக்கின்ற பங்குதாரர்களுக்கு  முக்கியமான தகவல்களை பகிர்ந்திடவும் தளத்தை வழங்குகின்றது.

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகம் காலி மாவட்டத்தில் கரன்தெனியவில் நிறுவப்பட்டது. திணைக்களத்தின் முதல் பெரிய திட்டங்களில் காலி, பின்னதுவவில் உள்ள கறுவா வாசல் திட்டமாகும்.

விரைவு இணைப்புகள்

தொடர்பு கொள்ளவும்